In Loving Memory of

Parameswary Srirajasingam

12 October 1928 - 04 February 2026

“Her love remains our light.”

எமது அன்புத் தாயின் நினைவுகளால் ஓர் ஆலயம்

வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த, அகிலம் போற்றும் அன்னைத் தெய்வமாய்த் திகழ்ந்த எம் அன்புத் தாய்,

அமரர் பரமேஸ்வரி சிறிராஜசிங்கம்

அவர்களின் நினைவில் மலர்ந்து, என்றும் வாடாத மணம் வீசி வரும்

பரமேஸ்வரியகம்

Image0111
amma-young

சமர்ப்பணம்

அன்பான சேயாகி… பாசமிகு சோதரியாகி…
நற்றுணை இல்லாளாகி…
பண்பான மருமகளாகி…
பரிவுள்ள மைத்துனியுமாகி…
பாசம் வீசும் தாயாகி…
அரவணைக்கும் மாமியாகி…
வாஞ்சைமிகு பேத்தியுமாகி…
நிறைவான பூட்டியுமாகி…

வையத்துள் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்த
எம் பாசமிகு அன்னைக்கு,
இந்த
“பரமேஸ்வரியகம்”
நினைவுப் பேழையை
அன்புடன் சமர்ப்பிக்கின்றோம்!